மனநோயாளிக்கு வந்த பரிதாப சாவு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:
மனநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவருக்கு நோய் முற்றியதால், உடன்சிகிச்சை பெற்று வந்தவரை கழுத்தை நெரித்துக் கொன்றார்.
மதுரையைச் சேர்ந்த காசிம் என்பவரது மகன் அப்துல்லா (16). இவர் மனநோயால்பாதிக்கப்பட்டிருந்தார். குற்றாலத்தில் இருக்கும் மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இதே மருத்துவமனையில் பலரும் மனநோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் கீழப்புலியூரைச் சேர்ந்த வல்லாறு என்பவரின் மகன் தங்கதுரைஎன்பவரும்ஒருவர்.
திங்கள் கிழமை காலை 7 மணி அளவில் அப்துல்லாவின் அறைக்குச் சென்ற தங்கதுரைஅவரை வெளியே இழுத்து வந்தார்.அவருடன் தகாராறு செய்தார். பின் திடீரெனஆவேசம் வந்து அப்துல்லாவின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார்.
அப்துல்லா எவ்வளவு போராடியும் தப்பிக்க முடியாமல் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.












Click it and Unblock the Notifications