"தமிழர் நலனுக்காகவே ராஜ்குமார் கடத்தப்பட்டார்
சேலம்:
தமிழர் நலனுக்காகவும், இரு மாநிலங்களுக்கு இடையே இருந்து வரும்பிரச்னைகளுக்குத் தீர்வு காணவே வீரப்பன் மூலம் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ளார் எனதமிழ்த் தீவிரவாதிகளின் காட்பாதர் என அழைக்கப்படும் புலவர் கலியபெருமாள்கூறியுள்ளார்.
சேலம் அருகே உள்ள பென்னாடத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்கலியபெருமாள். தமிழர் விடுதலைப் படை என்ற நக்சலைட் பிரிவைத் துவக்கியவர்.இன்றைய தமிழ்த் தீவிரவாதிகளின் காட்பாதர் எனப்படுபவர்.
சேலத்தில் கலியபெருமாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பனும் தமிழர்விடுதலைப் படையினரும் அமைதியான முறையிலேயே இணைந்து தமிழர் நலன்காக்க காட்டுக்குள் இருந்தபடியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீரப்பன் விடுத்துள்ள நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். தடா கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். தடா சட்டம் வாபஸ்ஆகி பல ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டம் காலாவதியான பிறகும், பலரைஇன்னும் சிறையில் வைத்திருப்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை.
இதை விட்டு விட்டு வீரப்பனைப் பிடிப்பதற்காக தடா கைதிகளை விடுதலைசெய்யாமல் வைத்திருப்பதாகக் கூறுவது அபத்தமானது. இவர்களை விடுவிக்கவும்,வீரப்பன் விடுத்துள்ள கோரிக்கைகளைத் தீர்க்கவும் போதிய அதிகாரம் மத்தியஅரசிடமே உள்ளது. மாநில அரசுகளிடம் எவ்வித அதிகாரமும் இல்லை.
மத்திய அரசோ, எவ்விதத்திலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிமேற்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழர்களின் நலனுக்காக விடுக்கப்பட்டுள்ளஇந்தக் கோரிக்கையில் தமிழர் விடுதலைப் படையின் தலைவர் மாறன் சரியானபாதையில் போராட்டம் நடத்தி வருகிறார்.
வீரப்பனைக் கொள்ளையன் எனக் கூறி வருகின்றனர். உண்மையில்கொள்ளையடிப்பவர்கள் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான். இவர்கள்மறைமுகக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். தவறான முறையில் இதற்குவீரப்பனின் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றார் கலியபெருமாள்.