கிஸ்ஸிங்கர் கவலைக்கிடம்
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர்கவலைக்கிடமாக உள்ளார்.
நியூயார்க் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலையில் ஓரளவு மாற்றம்தெரிவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
77 வயதாகும் கிஸ்ஸிங்கருக்கு புதன்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டது. முன்னாள்அமெரிக்க ஜனாதிபதிகளான நிக்ஸன் மற்றும் போர்ட் காலத்தில் அமைச்சராகஇருந்தவர் கிஸ்ஸிங்கர். 1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானிற்கும்இடையே போர் மூண்டபோது, அதிபர் நிக்ஸனும், வெளியுறவு அமைச்சர்கிஸ்ஸிங்கரும் பாகிஸ்தானை ஆதரித்தனர்.
இந்திய, பாகிஸ்தானிய போர் முடிவில் வங்கதேசம் என்ற புதிய நாடு பிறந்ததுகுறிப்பிடத்தக்கது. பின்னர் சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தவும்கிஸ்ஸிங்கர்தான் முயற்சி எடுத்தார். பின்னர் அதிபர் நிக்ஸன் இந்தியா வரவும் ஏற்பாடுசெய்தார்.
1969-ம் ஆண்டு அதிபர் நிக்ஸனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கிஸ்ஸிங்கர்இருந்தார். 1982-ம் ஆண்டு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சைமேற்கொள்ளப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications