தமிழர்கள் படுகொலைக்கு இலங்கை அரசே காரணம் .. புலிகள் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசின் திட்டமிட்ட சதி காரணமாகவே, பந்தாரவலே, மறுவாழ்வு முகாமில்,26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று விடுதலைப் புலிகள்குற்றம்சாட்டியுள்ளனர்.

இலங்கையின் பந்தாரவலே நகரில் புதன்கிழமை 26 முன்னாள் விடுதலைப் புலிகள்படுகொலை செய்யப்பட்டனர். கிராமத்திலிருந்து வந்த நூற்றுக்கணக்கான சிங்களர்கள்,கம்பு, கத்தி, கற்களைக் கொண்டு தாக்கி இவர்களைக் கொன்றனர்.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப்புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கைஅரசின் திட்டமிட்ட சதியே இந்த படுகொலைச் சம்பவம். ராணுவம், போலீஸ் மற்றும்முகாம் அதிகாரிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்தே தமிழர்களைக் கொன்றுள்ளனர்.

கிராமத்தினரை வன்முறையில் ஈடுபட தூண்டியதும் அரசுதான். இலங்கை அரசே இந்தக்கோழைத்தனமான நடவடிக்கைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

அரசின் திட்டமிட்ட சதிக்கு எங்களிடம் போதுமான ஆதாரம் உள்ளது என்றுகூறியுள்ளனர்.

இதற்கிடையே, கொல்லப்பட்டவர்களில் 15 பேரின் உடல்கள், பிரேதப்பரிசோதனைக்குப் பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடல்கள் பின்னர்அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+