கள்ளக் காதல் ... சகோதரியைக் கொன்றார் தம்பி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் என்ற பகுதியில் கள்ளக் காதல் புரிந்தசகோதரியையும், அவரது கள்ளக் காதலரையும் தம்பி வெட்டிக் கொன்றார்.
சாலவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான் பேகம். 30 வயதாகும் ஜான் பேகத்தின் கணவர்இறந்து விட்டார். அவருக்கு 3 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். காஞ்சிபுரம்அருகே ஒரு பாலிடெக்னிக்கில் வேலை பார்த்து வந்தார்.
இதே பகுதி, தோட்டக்கால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் திருமணம்ஆகாதவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்துவந்ததாகத் தெரிகிறது.
இருவரும் காதலித்து வந்ததது, ஜான் பேகத்தின் தம்பி செளகத் அலிக்குப்பிடிக்கவில்லை. அக்காவிடம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கண்டித்தும்உள்ளார். இருந்தும் கள்ளக் காதல் தொடரவே, நாராயணன் வீட்டுக்குச் சென்றார்.அங்கிருந்த நாராயணன் மற்றும் ஜான் பேகத்தைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதன் பின் செளகத் அலி தலைமறைவாகிவிட்டார்.
போலீஸார் அலியைத் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications