For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொச்சியில் ரூ. 1000-க்கு விற்கப்பட்ட திருப்பூர் சிறுமி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திருப்பூரிலிருந்து கடத்திச் சென்று கொச்சியில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமியைஉறவினர்களே சென்று மீட்டு வந்தனர்.

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் கடை வைத்திருப்பவர் தெய்வாத்தாள். இவர்கள்கோவை அனாதை இல்லத்திலிருந்து முத்துலட்சுமி (13) என்ற சிறுமியை தத்து எடுத்துவளர்த்து வந்தனர்.

இவர் ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அப்போது இவரது வீட்டிற்குஅருகே தங்கியிருந்த மகேஸ்வரன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.மகேஸ்வரன் ஆசை வார்த்தை சொல்லி, முத்துலட்சுமியை வெளியூருக்கு அழைத்துச்சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மகேஸ்வரனைப் போலீசார் திருச்சி அருகே கைது செய்து விசாரணைசெய்தனர். அப்போது உறவினர் பொறுப்பில் முத்துலட்சுமியை விட்டுள்ளதாகத்தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மகேஸ்வரனை விட்டு விட்டனர்.

இந்த தகவலை அறிந்த தெய்வாத்தாள், சீர்காழி அருகே உள்ள ஒடாரப்பள்ளிக்குச் சென்றுவிசாரித்தார். அங்கு முத்துலட்சுமி, கொச்சியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலை செய்யஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. தெய்வாத்தாள்கொச்சிக்குச் சென்று முத்துலட்சுமியை மீட்டு வந்துள்ளார்.

முத்துலட்சுமி மீட்கப்பட்டது பற்றி தகவல் அறிந்த திருப்பூர் மகளிர் காவல் நிலையத்தினர்உஷாரடைந்தனர். கொச்சியில் தங்கியிருந்தபோது முத்துலட்சுமிகொடுமைப்படுத்தப்பட்டாரா?, மகேஸ்வரன் எங்குள்ளார் என்பது பற்றிய விசாரணையில்தீவிரமாக இறங்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X