For Daily Alerts
Just In
"இந்தியாவால் அணு ஆயுத நீர்மூழ்கிகள் தயாரிக்க முடியும்
மும்பை:
அணு ஆயுத நீர் மூழ்கிகளை தயாரிக்கும் திறன் இந்திய கடற்படைக்கு உள்ளதாககடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் சுசில் குமார் கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறையின், சீரமைப்புப் பிரிவு இயக்குநர் அலுவலகம் சார்பில் நடந்தகருத்தரங்கில் அவர் பேசுகையில், இந்தியாவிடம் போதுமான அளவு அணுவிஞ்ஞானிகள் உள்ளனர். எனவே நம்மால் அணு ஆயுதம் பொருத்தப்பட்ட நீர் மூழ்கிக்கப்பல்களை கட்ட முடியும்.
உலகிலேயே மிகவும் சிறப்பான கடற்படை, இந்தியாவினுடையது என்பதில்சந்தேகமேயில்லை. நமது கடற்படைக்கு சிறப்பான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.தரம் வாய்ந்த விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. ராணுவத் தளவாடங்கள்போதுமான அளவில் உள்ளன என்றார் அவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, November 3, 2000, 5:30 [IST]