காஷ்மீர் பிரச்சனை: சர்வதேச ஆய்வு குழு அமைக்க கோர்பசேவ் யோசனை
மாஸ்கோ:
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பல்லாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று அமைக்கலாம் என்று சோவியத் யூனியனின் முன்னாள் அதிபர் கோர்பசேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் டான் ஆங்கிலப் பத்திரிகையில் கார்பசேவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஐ.நா.சபையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான நயீம் ரத்தோர், மாஸ்கோவில் முன்னாள் அதிபர் கார்பசேவைசந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சர்வதேச ஆய்வுக் குழு குறித்த யோசனையை கார்பசேவ் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பல நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இடம் பெறலாம். இவர்கள்தவிர சீனா, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இக்குழுவில் இடம் பெறச் செய்யலாம் என்று கார்பசேவ் தரப்பில் ஆலோசனைதெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்பதை கார்பசேவ் முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறார்.எனவே, சர்வதேச ஆய்வுக் குழு அமைப்பது குறித்தான திட்டம் வெறும் யோசனை என்ற அடிப்படையிலேயே இருக்கிறது என்றார். அவர்.
நயீம் ரத்தோர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஐ.நா.வில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கார்பசேவ் சந்திப்பின்போதுவெளிப்படுத்தப்பட்ட யோசனையின் பின்னணியில் நயீம் இருக்கலாம் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications