வாக்காளர் அடையாள அட்டையில் முறைகேடு .. ஜெ.

Subscribe to Oneindia Tamil

மதுரை:

வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகத்தில் திமுக அரசு முறைகேடுகள்செய்வதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஒரு வாரமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவுபொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஜெயலலிதா பேசினார்.

அவர் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்களையும் புகைப்படம் எடுத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தி.மு.க.வினரின் ஆணைக்கு கட்டுப்பட்டு முறைகேடான செயல்களில்ஈடுபடக்கூடாது. தேர்தல் ஆணையம் உடனடியாக செயல்பட்டு தி.மு.க.வினரின்முறைகேடுகளைத் தடுக்க வேண்டும்.

முன்னாள் உள்துறைச் செயலர் வெங்கட்ராமனை நான் தாக்கியதாக கருணாநிதி கூறியபுகார் தவாறனது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருணாநிதி என்மீது பொய் வழக்குகள் போடுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

என் மீது எத்தனை விதமான ஆதாரமில்லாத வழக்குகளை தி.மு.க. அரசு போட்டாலும்மக்கள் ஆதரவுடன் நான் நிரபராதி என நிருபிப்பேன் என்று அவர் பேசினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+