ஆர்.எஸ்.எஸ்.சுக்கு முஸ்லீம்லீக் விடும் சவால்
கோவை:
ஆதாமை முதலாகத் தோன்றியதாக ஆர்.எஸ். எஸ் இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டால், நாங்கள் ராமரையும்,கிருஷ்ணரையும் முன்னோர்களாக ஏற்றுக் கொள்ளத் தயார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் காதர்மொகைதீன் தெரிவித்தார்.
கோவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் கே.எம் காதர் மொகைதீன் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணியாகப் போட்டியிடுகின்றனர். ஆனால், வெற்றிபெற்ற பின்னர் தனிக் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்கின்றன.
கூட்டணியில் இடம் பெற்ற கட்சி எதிர்க் கட்சியாக மாறி விடுகிறது. இதனால் தனிக் கட்சியின் ஆதிக்கமேஏற்படுகிறது. அவர்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ப ஆட்சி அமைத்துக் கொள்கின்றனர். இந்த நிலை மாறவேண்டும்.
தேர்தல் கூட்டணியில் இடம் பெறும் கட்சி, ஆட்சியிலும் இடம் பெற வேண்டும். இந்தக் கூட்டணி ஆட்சியேதமிழகத்திற்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
தற்போது இந்திய முஸ்லிம் லீக் தமிழ் மாநில காங்கிரஸ் அணியில் உள்ளது.
தமிழகத்தில் 3-வது அணி வருமா என்பது குறித்து இப்போது கூற முடியாது. தேர்தல் சமயத்தில் தான் இந்த முடிவுமேற்கொள்ளப்படும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் ஓராண்டிற்குள் 10 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.வரும் தேர்தலில் எந்த அணி அதிக இடங்களில் போட்டியிட இடங்கள் அளிக்கிறதோ அந்தக் கூட்டணியில் இடம்பெறுவோம். இல்லையெனில் 10 இடங்களில் நாங்கள் போட்டியிடுவது உறுதி.
கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சி நன்றாக உள்ளது. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும். அரசு அறிவித்தபடி சிறுபான்மை மேம்பாட்டு நிதியில் உருது அகாடமிக்கும் நிதி அளிக்க வேண்டும்.
கோவையில் போஸ்டர் ஒட்ட எஙகள் இயக்கத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனைவன்மையாகக் கண்டிக்கிறோம். திருச்சியில் இம்மாதம் மாநிாடு நடத்தவுள்ளோம். இதில் கலந்து கொள்ளமூப்பனாருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ராமரையும் கிருஷ்ணரையும் முன்னோர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்எனக் கூறியுள்ளார். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அவர்கள் ஆதாமை முதலில் தோன்றியமுன்னோர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications