எத்தியோப்பியா கிளம்பியவர் கார் விபத்தில் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே டாடா சுமோ வேனும், லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் சத்துவாச்சேரி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜேக்கப் (77).இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் ஜெயக்குமார் (46) வேலூரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்குஎத்தியோப்பியாவில் 3 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்ற அழைப்பு வந்ததைத்தொடர்ந்து அங்கு செல்ல முடிவு செய்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் எத்தியோப்பியா செல்வதற்காக திங்கள்கிழமையன்று வேலூரிலிருந்து கிளம்பினார். அவரை வழியனுப்பி வைக்க அவரதுமாமனார் ஜேக்கப், மாமியார் ஆனந்தா (70), மனைவி ஜஸ்டினா (43), மகன் நோயல் (21),மகள் நான்சி (18), உறவினர் மகிழினி (25), பணிப்பெண் விமலா ஆகியோர் டாடா சுமோமூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகே உள்ள பென்னலூரில் மணல் எடுக்க வாலாஜா பேட்டைசென்று கொண்டிருந்த லாரியுடன் டாடா சுமோ நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணம்செய்த ஜேக்கப், நாயல் ஆகியோர் உயிரிழந்தனர் 5 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகைச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications