கூட்டணிக்கு அவசரம் இல்லை .. இளங்கோவன்
கரூர்:
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உறவு வலுப் பெற்றுள்ளது. இப்போது கூட்டணிநீடித்து வந்தாலும், தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என தமிழககாங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே எஸ் இளங்கோவன் அளித்தபேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய எவ்வித சாத்தியமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அ.தி.மு.க. வுடன் காங்கிரஸ் உறவு வலுப் பெற்று வருகிறது. இப்போதும்கூட்டணி நீடித்து வருகிறது. எனவே அணிமாற்றம் நிகழ வாய்ப்பு இல்லை.
இப்போது கூட்டணி நீடித்து வந்தாலும், தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவுமேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் தேர்தலைப் பொறுத்தவரை நூறு சதவீதம் சோனியா காந்திக்கு வெற்றி வாய்ப்புஉள்ளது. இந்த வெற்றி வாய்ப்பிற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
ஜிதேந்திர பிரசாதாவிற்கு தமிழகத்தில் வரவேற்கக் கூட ஆள் இல்லை. அவரது தோல்விஉறுதியாகி விட்டது. சதாரண விஷயங்களில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதுசகஜமே.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நான் தலைவராகிய அடுத்த நாளே என்னை மாற்றக்கோரி எவ்வித எதிர்ப்பும் கிளம்பாமல் இருந்ததே எனது வெற்றி தான். தேர்லில் சோனியாவெற்றி பெற ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications