திமுகவினர் தாக்குதலில் அதிமுக தலைவர் காயம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் அரசனூரில் திமுக தொண்டர்கள் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் காங்கிரஸ்தொண்டர் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

இது குறித்துப் போலீஸார் கூறுகையில், அரசனூரில் டீக் கடை ஒன்றின் வாசலில் பலர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையிலிருந்து அரிவாள்களுடன் வந்த கும்பல் ஒன்று அவர்களை சராமரியாகத் தாக்கியது.

இச்சம்பவத்தில் அதிமுக கிராம பஞ்சாயத்துத் தலைவர் முனுசாமி படுகாயமடைந்தார். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

சமீபத்தில் தான் முனுசாமி திமுக விலிருந்து பிரிந்து அதிமுக வில் சேர்ந்தார். காயமடைந்த இன்னொருவர் சிவகங்கை கங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர்.

எம்.பி.கண்டனம்:

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் எம்.பி.சுதர்ஷன் நாச்சியப்பன் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுகபொதுக்குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், கருணாநிதியை சிறையில் தள்ளுவோம் என்று ஜெயலலிதா பேசினார்.

ஜெயலலிதாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சமீபத்தில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்பட்டது. சிவகங்கைமாவட்டத்தில் நடந்த பேரணியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் பேசிய பேச்சால், திமுக தொண்டர்கள் தூண்டி விடப்பட்டனர். இதையடுத்தேஇந்த தாக்குதல் நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+