மலையிலிருந்து பஸ் விழுந்ததில் 35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
க்யுடோ (ஈக்வடார்):
ஈக்வடார் நாட்டில் 820 அடி உயமுள்ள மலையிலிருந்து பயணிகள் சென்ற பஸ் கவிழ்ந்து விழுந்ததில், 35 பேர் இடத்திலேயே இறந்தனர். 25 பேர்படுகாயமடைந்தனர்.
க்யுடோ விலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பனோஸ் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பஸ் ஒன்று விஸ்காயா நகர் நோக்கிச்சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் இருந்தனர்.
தீடீரென்று மலையிலிருந்து கீழே விழுந்தது. இதில் 35 பேர் இறந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவைச் சங்க செய்தித்தொடர்பாளர்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications