லாரி மோதி 2 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
மேட்டுப்பாளையம் அருகே காய்கறி லாரி மோதியதில் சைக்களில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள் இறந்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே காரமடை உள்ளது.காரமடையிலிருந்து ரகுமணி, அருண் (18) என்ற இரு மாணவர்கள்மேட்டுப்பாளையத்திற்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி லாரிவந்து கொண்டிருந்தது. இந்தலாரி இந்த இரு மாணவர்களின் மீதும் மோதியது. இதில் இரண்டு மாணவர்களும்சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications