வெல்வாரா அல்கோர்?
வாஷிங்டன்:
ராய்ட்டர்ஸ் மற்றும் எம்.எஸ்.என்.பி.சி. ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தியஇறுதிக் கருத்துக் கணிப்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய துணை அதிபர்அல் கோர் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அல்கோர் முன்னிலையில் இருந்தாலும் கூட, அவருக்கும், ஜார்ஜ் புஷ் ஜூனியருக்கும்இடையே 2 சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே புளோரிடோ மாநிலஓட்டுக்கள் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்குகளாக கருதப்படுகிறது.
இரு நிறுவனங்களும் தொலைபேசி மூலம் வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பைநடத்தின. உள்ளூர் நேரப்படி அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை இரவு 9மணிக்கு இந்தக் கருத்துக் கணிப்பு முடிந்தது.
நாடு முழுவதிலும் மொத்தம் 1200 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பிரபலகருத்துக் கணிப்பு நிபுணர் ஜான் ஸோக்பி இதை நடத்தினார். இதில் 48 சதவீதம் பேர்கோருக்கு ஆதரவாகவும், 46 சதவீதம் பேர் புஷ் ஜூனியருக்கு ஆதரவாகவும்வாக்களித்தனர்.
கிரீன் பார்ட்டி தலைவர் ரால்ப் நாடருக்கு 5 சதவீதம் பேர் வாக்களித்தனர். பிறவேட்பாளர்களான ஹாரி பிரவுன், பாட் புச்சானன் ஆகியோர் தலா அரை சதவீதம்வாக்குகளைப் பெற்றனர்.
இல்லினாய்ஸ், மிச்சிகன், பென்சில்வேனியா, வாஷிங்டன் ஆகிய மாநிலங்களில்கோருக்கு ஆதரவு அதிகம் இருந்தது. ஆனால் சொந்த மாநிலமான டென்னசியில், புஷ்கை ஓங்கியிருந்தது.
மிசெளரி, விஸ்கான்சின், புளோரிடா ஆகிய மாநிலங்களில் இருவரும் சம பலத்துடன்காணப்பட்டனர்.
முக்கியமான 9 மாநிலங்களில் மொத்தம் 153 ஓட்டுக்கள் உள்ளன. இங்கு கோருக்கு 99வாக்குகளும், புஷ் ஜூனியருக்கு 43 வாக்குகளும் கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications