மணிப்பூரில் பந்த் .. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குவஹாத்தி:
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையைக் கண்டித்து செவ்வாய்க்கிழமைநடந்த முழு அடைப்பு காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மணிப்பூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள புறக் காவல் படையினர் மற்றும் புறராணுவப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், பொதுமக்களிடம் அடக்குமுரையுடன் நடந்துகொள்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை முதல் பந்த் நடைபெற்றது.
இதையடுத்து மாநிலம் முழுவதிலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள்மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகை மிகவும் குறைவாக இருந்தது.
தலைநகர் இம்பால் உள்படமாநிலம் முழுதிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அகில மணிப்பூர் மாணவர் கழகம் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.மொத்தம் 10 அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
யு.என்.ஐ.