"பாலசிங்கத்தைச் சந்தித்த வைகோவை நீக்க வேண்டும்
பாண்டிச்சேரி:
ம.தி.மு.க. தலைவரும், எம்.பி.யுமான வைகோ விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஆன்டன்பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசியதால் மதிமுக வை, திமுக விலிருந்து விலக்க வேண்டும் என்று பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் வி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களிடம் இதுகுறித்துக் கூறியதாவது:
திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கின்றன. சமீபத்தில் மதிமுகதலைவர் வைகோ, விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசினார்.
இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, வைகோவிடம் கேட்டுக் கொண்ட போதும்,தமிழக முதல்வர் கருணாநிதி இவ்விஷயத்தில் மெளனம் சாதித்து வருகிறார்.
வைகோ- பாலசிங்கத்திற்கிடையே நடந்த சந்திப்பு சட்ட விரோதமானது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கே குந்தகம்விளைவிக்கக் கூடியது. இதுதவிர பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புலிகளுக்கு ஆதரவாகக்குரல் கொடுத்து வருகிறார்.
இதன்மூலம் திமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கின்றனஎன்பது தெளிவாகிறது என்றார் நாராயணசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications