ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகத்தை சந்திக்கிறது தமிழகம்
சென்னை:
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கவுள்ள ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழக அணி, கர்நாடக அணியைஎதிர்த்து விளையாடவுள்ளது.
முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.
கர்நாடக அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களான ஸ்ரீநாத், வெங்கடேசப் பிரசாத் ஆகியோர் இடம் பெறவில்லை. இருப்பினும் கேப்டன் விஜய் பரத்வாஜ், அருண்குமார், மிதுன் பீரலா, ரோலேண்ட் பேரிங், அஜித் சோமசுந்தர் ஆகிய முக்கிய பேட்ஸ்மென்கள் உள்ளனர்.
ஹைதராபாத் அணியுடனான முதல் லீக் போட்டியில் கர்நாடக அணி முதல் இன்னிங்ஸ் லீட் மூலம் கிடைத்த புள்ளிகளுடன் மட்டுமே உள்ளது. மேலும் அணியிலும்முக்கியவீரர்கள் இல்லை. இது தமிழக அணிக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் சென்னையில் போட்டி நடப்பதால் தமிழ அணிவெற்றியை குறி வைத்து விளையாடும் என்று நம்பலாம்.
யு.என்.ஐ.