15 அகதிகள் தமிழகம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து அகதிகள் 15 பேர் வியாழக்கிழமை ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கையில் நடக்கும் இனக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அதிபர் சந்திரிகா அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து வருகிறார்.இதைத் தொடர்ந்து நார்வே நாட்டைச் சேர்ந்த சமரசக் குழு இலங்கை வந்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தை காரணமாக கடந்த 10 நாட்களாக இலங்கையில் அமைதி நிலவி வருகிறது. இப்போது 2 நாட்களாக மீண்டும் போர்தீவிரமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஏறத்தாழ 15 நாட்களுக்குப் பிறகு முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 15 பேர் அகதிகளாக படகில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இவர்களில் 4 பேர் ஆண்கள். மற்றவர்கள் குழந்தைகள். தனுஷ்கோடியில் உள்ள அரிச்சமுனை கடற்கரைக்கு வந்து சேர்ந்த அவர்களைப் போலீஸார்சோதனை நடத்தி, பின்னர் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.