நிதி மோசடி: அமெரிக்காவில் இந்தியப் பெண் கைது
நியூயார்க்:
போலியான பில் மூலம் 26,000 டாலர் வரை மோசடி செய்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் கைதுசெய்யப்பட்டார்.
நியூஜெர்சியில் செய்ரேவில்லேயில் ஆர்.ஜி.சி. இன்பர்மேசன் டெக்னாலஜி நிறுவனத்தில் சாப்ட்வேர் ஆலோசகராகபணியாற்றி வருபவர் அண்ணபூர்னா ராஜூ (வயது 31). இந்த நிறுவனம் பள்ளிகள் கட்டும் நிறுவனமானஎஸ்.சி.ஏக்கு சாப்ட்வேர் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்தது.
எஸ்.சி.ஏவில் இவர் வேலை பார்க்கும் நேரத்துக்கு ஏற்ப இவருக்கு ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. இருவாரங்களுக்கு ஒரு முறை அங்கு எத்தனை மணி நேரம் வேலை பார்த்தார் என்பதற்கு எஸ்.சி.ஏ.கண்காணிப்பாளரிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கி வர வேண்டும். அதை ஆர்.சி.ஜி. நிறுவனத்தில்கொடுத்து வேலை பார்த்த நேரத்துக்கு ஏற்ப ஊதியத்தை பெற்று வந்தார்.
ஆனால், எஸ்.சி.ஏவில் கண்காணிப்பாளரிடம் கையெழுத்து வாங்கிய பின்னர் அதே போன்ற மற்றொரு படிவத்தைஅண்ணபூர்னா தயாரித்துள்ளார். அதில், கூடுதல் நேரம் வேலை பார்த்தாக எழுதி, கண்காணிப்பாளரின்கையெழுத்தையும் சூப்பர் இம்போசிங் மூலம் இவரே போட்டுள்ளார்.
பல மாதங்களாக இவர் இந்த மோசடியை செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது.
இந்த மோசடியை எஸ்.சி.ஏ. கண்காணிப்பாளர் கண்டுபிடித்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்துஅண்ணபூர்னாவை கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.