நெடுமாறன், கோபால் காட்டுப் பயணம் துவங்கியது
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்ருமாரை வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியாக தூதுக்குழு 6-வது முறையாக காட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இம் முறை நிச்சயமாக ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ள நிலையில், நிச்சயம்ராஜ்குமாருடன் தான் திரும்புவோம் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி சந்நதன வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்ரகுமாரை மீட்க தூதுக் குழுவினர்சனிக்கிழமையன்று காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சட்டசபையில் எதிர் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாக தாக்கி பேசியதால் நெடுமாறன் காட்டுக்குச் செல்லமறுப்பு தெரிவிந்திருந்தார்.பல தலைவர்களின் சமாதானத்திற்கு பிறகு நெடுமாறன் காட்டுக்கு செல்ல சம்மதித்தார்.
சென்ற முறை தூதுக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் கல்யாணியும், சுகமாரனும் இந்த தூதுக்குழுவிலும் இடம் பெற்றுள்ளனர். வீரப்பனின்உறவினரும் நக்கீரன் நிருபருமான சிவசுப்ரமணியன் முன்னதாகவே காட்டுக்கு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
தூதுக்குழுவினர் வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்ததும் அவனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் எனநம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்குச் செல்லும் முன் நெடுமாறன் கூறுகையில், நம்பிக்கையுடன் செல்கிறோம். இரு மாநில மக்களின் அன்பை எங்களுடன் எடுத்துச்செல்கிறோம் என்றார்.
நெடுமாறன் தலைமையிலான குழுவும், கோபால் தலைமையிலான குழுவும் தனித் தனி கார்களில் காட்டுக்குச் செல்வதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications