கோவையில் மின்சாரம் தாக்கி பிகார் வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த, பிகாரைச் சேர்ந்த வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆஜாத் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.தனது நண்பர்களுடன் அன்னூர் ரோட்டில் தங்கியிருந்தார். ஓய்வு நாளான சனிக்கிழமை அறையில் இவர் மட்டும் இருந்துள்ளார்.
அப்போது பாடல்கள் கேட்பதற்காக டேப் ரெக்கார்டரைச் சரி செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.இதில் மயங்கி விழுந்த ஆஜாத், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications