டால்மியா வீட்டில் சி.பி.ஐ. சோதனை
கல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் கல்கத்தா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திங்கள்கிழமை திடீர்சோதனை நடத்தினர்.
சி.பி.ஐ.யின் கல்கத்தா அலுவலகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. இதுகுறித்து கல்கத்தா சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில்,டால்மியாவின் வீட்டில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்என்றனர்.
கிரிக்கெட் போட்டிகளை டி.வியில் ஒளிபரப்புவது தொடர்பான ஒப்பந்தங்களில் டால்மியா முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி டால்மியாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில்தற்போது சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
டால்மியா வீடு தவிர, தனியார் டி.வி. நிறுவன அதிகாரிகள் சிலருடைய வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடந்தது. இதேநேரத்தில், லஞ்சஒழிப்பு அதிகாரிகளும் கல்கத்தா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
1996 மற்றும் 1999ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான உரிமைகள்குறித்த ஒப்பந்தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். முறையான விசாரணைக்குப் பின்இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அதுதொடர்பாகவே தற்போதைய திடீர் சி.பி.ஐ. சோதனை என்றுகூறப்படுகிறது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தின. 99-ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை இங்கிலாந்து நடத்தியது.












Click it and Unblock the Notifications