கார்த்திகை தீப விழாவிற்கு 3000 கிலோ நெய்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துவாங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா இம்மாதம் 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 9ம் தேதிஅதிகாலை 4 மணிக்கு கார்த்திகை தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
டிசம்பர் 9 ம் தேதி தொடங்கி 11 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக தீபம் தொடர்ந்து எரியும். முதல் நாள் கார்த்திகை தீபத்திற்கு 625 கிலோ நெய்ஊற்றப்படும்.
கோவில் திருப்பணி ஒரு கோடி ரூபாய் செலவில் திருப்பணி கமிட்டித் தலைவர் இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் நடந்து வருகிறது. கார்த்திகை தீபத்திற்குமுன்பாக திருப்பணிகள் முடிக்க முடியாததால், கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications