கல்வியாளர் கா.மு.பாதுஷா மரணம்
திருநெல்வேலி:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் அஞ்சல் வழிக் கல்வித் துறை இயக்குநரும்,மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளருமான கா.மு.பாதுஷா நெல்லையில்,ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச்சேர்ந்தவரான பாதுஷாவுக்கு 58 வயது. இவருக்கு நூர்ஜஹான் என்ற மனைவியும்,இருமகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
பொருளாதாரத்தில் டாக்டர் பெற்றவரான பாதுஷா, தனது கல்வி வாழ்க்கையை 1967-ல்சென்னை புதுக்கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தது முதல் துவக்கினார்.
இளையாங்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த அவர் பின்னர்அக்கல்லூரியின் முதல்வராக உயர்ந்தார். 1979-ம் ஆண்டு முதல் 90ம் ஆண்டு வரைஅப்பதவியில் நீடித்தார்.
1990-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வித் துறையின்இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1998-ல் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகபதிவாளராகநியமிக்கப்பட்டார்.
பாதுஷா, பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரது மறைவையொட்டி,மனோன்மணீயம் பல்கலைக்கழகத்திற்கு திங்கள்கிழமை விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications