மாணவியிடம் வம்பு .. ஆசிரியர் கைது

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில்லுக்கு, சிதம்பரம் கோவிலில் தலைப்பாகையுடன் செல்லஅனுமதி வழங்கப்பட்டது.

பாண்டிச்சேரியில் வந்துள்ள கில், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி வின்னியுடன், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குவந்தார்.

கோவில் முன்பு அவரைத், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.சாரங்கி, கலெக்டர் சந்தீப் சக்சேனா மற்றும்அதிகாரிகள் வரவேற்றனர். கோவில் வழக்கப்படி, ஆண் பக்தர்கள் தலைப்பாகை, மேல் சட்டை அணிந்துகோவிலுக்குள் செல்லக் கூடாது.

அதன்படி, கோவிலுக்குள் எம்.எஸ்.கில் சென்றதும், சட்டை, பனியன் ஆகியவற்றைக் கழற்றினார். ஆனால்தலைப்பாகை மட்டும் அணிந்து செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் கோவில் சார்பில் செயலாளர்பொது தீட்சிதர் கனகசபை மலர் மாலை அணிவித்து அழைத்துச் சென்றார்.

அதன்பிறகு, கில், அவரது மனைவி வின்னி கில் ஆகியோர் தில்லை நடராஜர், கோவிந்தராஜ பெருமாள்,சர்பேஸ்வரர் ஆகிய சன்னதிகளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அவர்களுக்கு விபூதி மற்றும் கற்பூரதீபம் வழங்கப்பட்டது. பிரசாதம் பெற்றுக்கொண்ட கில், அங்கிருந்த அர்ச்சகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+