பெற்றோர் எதிர்ப்பு .. காதலர்கள் தற்கொலை
திருப்பூர்:
காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
திருப்பூர் அருகே சாமுண்டிபுரம், மாரியம்மன் கோயிலைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் சைலேந்திரி (19),வீடியோ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வீடியோ கடைக்கு அருகில் வேலை பார்த்து வந்தரஜேஷ் (23) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இரு குடும்பத்தினரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இரு குடும்பமும் அருகில் குடியிருந்து, அந்நியோன்னியமாகப்பழகி வந்தாலும், இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த எதிர்ப்பையடுத்து காதலர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தலைமறைவாகி விட்டனர்.இவர்களைப் பெற்றோர்கள் கண்டு கொள்ளாததால், இருவரும் மீண்டும் ஊர் திரும்பினர். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மாரியம்மன் கோயில் அருகில் விஷம் குடித்தனர். பின்னர் அங்கேயே படுத்து விட்டனர்.
மறுநாள் காலையில் இருவரும் இறந்து கிடப்பதை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications