தடா கைதிகள் வழக்கு: தனி நீதிபதிக்கு கர்நாடக ஐகோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விரைவில்விசாரித்து முடிக்க சிறப்பு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனுக்கு உதவியாக இருந்ததாக 1982-ம் ஆண்டு 121 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். கைது செய்யப்பட்ட பின் தடாசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1982-ம் ஆண்டு கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது விசாரணை பல ஆண்டுகளாகநடைபெறாமலே இருந்து வந்தது. 121 பேரில் 70 பேர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர். 51 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச்சென்றான். ராஜ்குமாரை விடுவிக்க அவன் பல நிபந்தனைகளை விதித்திருந்தான்.அவற்றில் ஒன்று மைசூரில் இருக்கும் தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது.

இந்த கோரிக்கையை ஏற்று சிறையில் இருக்கும் 51 தடா கைதிகள் மீது தொடுக்கப்பட்டவழக்கில் அவர்களை விடுதலை செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால்இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

தடா கைதிகள் மீதான வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்க தனி நீதி நீதிபதி அமைக்ககர்நாடக அரசு முடிவு செய்தது, இதற்கு உயர் நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+