கோவையில் பா.ம.கவின் 200-வது மாநாடு
கோவை:
கோவையில் பிரம்மாண்டமான முறையில் 200 வது சட்டசபைத் தொகுதி மாநாட்டை நடத்த பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டு வருகிறது.இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பாட்டளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதிலும் சிறிய அளவிலான மாநாடுகளை நடத்தி வருகிறது. இந்த மாநாடுகளை கிராம அளவில் முதலில் நடத்தத்தொடங்கியது.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அடிப்படை வசதிகளை கேட்டறியவும், தங்களது கொள்கைளைப் பரப்பவும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துஇத்தகைய மாநாடுகளை ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்த தொடங்கியது.
இதுவரை 199 மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. 200 வது மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் கோவையில் நடத்த முடிவு செய்தது. இதற்காகபந்தல் அமைக்கும் பணி, அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வ.உ.சிதம்பரனார் மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டிற்கு கோவை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பங்கேற்கின்றனர். வரும்19ம் தேதி இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கு முன்னதாக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் இங்கு நடக்கிறது.
மாநாடு ஏற்பாடுகளைக் கவனிக்க கோவையில், மாநிலத் தலைவர் ஜி.கே மணி தலைமையில், எம்.பி.,க்கள் இளங்கோவன், மூர்த்தி, துரை மற்றும்எம்.எல்.ஏ.க்கள் கணேசன் , கோவிந்தன், மஞ்சினி ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் 20 கோபுர அமைப்புகள் மற்றும்20 பெரும் அலங்கார வளைவுகள் வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில், நிருபர்களிடம் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஜி.கே மணி கூறியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி திட்டமிட்டபடி 234 தொகுதிகளில் மாநாடுகளை நடத்தவுள்ளது. இதில், 199 மாநாடுகள் முடிந்தது. 200வது மாநாடுகோவையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தவுள்ளோம். இதில், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றுநடக்கவுள்ளது.
டாக்டர் அவர்களின் தியாகம், கொள்கைகள், செயல்திட்டங்களில் மிஞ்சி நிற்பது சமூக நீதியே, உண்மை ஜனநாயகமே, எங்கும் எதிலும் சமநிலையே,மனிதநேயமே, பெண்ணுரிமையே போன்ற 12 தலைப்புகளில் நடக்கிறது.
இந்த கருத்தரங்கிற்கு இளங்கோவன் எம்.பி தலைமை ஏற்கிறார். கணேசன், கோவிந்தன், மஞ்சினி எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகிக்கின்றனர்.பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்தக் கலை நிகழ்ச்சியில் நாடகம், நடனம் நடக்கிறது. இதில் பாட்டளிமக்கள் கட்சியின் கொள்கைகள் விளக்கப்படும் என்றார் மணி.