மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் மெராப்பூர் அருகே மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மொராப்பூர் பகுதி மிகவும் மேடான பகுதியாகும். எல்லா பகுதிகளிலும் அடை மழை பெய்தாலும் இங்கு மட்டும்தூறல்தான் விழும். இதனால் இங்கே குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
மழை பெய்யாததால் மொராப்பூரைச் சுற்றியுள்ள ராமியன அள்ளி, கடத்தானூர், வகுத்துப்பட்டி, குருபரஹள்ளி,தாதனூர் ஆகிய பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் வற்றிவிட்டது.ராமியனஹள்ளியில் 500 அடிக்கு குழாய் கிணறு தோண்டியும் தண்ணீர் வருவதில்லை.
இந்த ஊரில் ஒரே ஒரு ஆழ்குழாய் கிணறு மட்டுமே உள்ளது. இதில் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டுமேதண்ணீர் வரும். இதனால் இப்பகுதியில் எப்போதும் பெண்கள் குடத்துடன் காணப்படுகின்றனர்.
இதற்கிடையே ஊர்ப்பெரியவர்கள் கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தால் மழை கொட்டும் என்று கருத்துக்கூறினார்கள்.
இதை மற்றவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இதைத்தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடந்தது. தாதம்பட்டிமாணிக்கம் மேஸ்திரியின் பஞ்சகல்யாணிக்கும் (பெண் கழுதை) ராமியனஹள்ளி குழந்தை மேஸ்திரியின் கல்யாணிராமனுக்கும் (ஆண் கழுதை) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
பின்னர் வைதீக முறைப்படி அந்த இரண்டு கழுதைகளுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. புத்தாடைஅணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அப்போது வெயில் அடித்ததால் கழுதைகளுக்குக் குடைபிடிக்கப்பட்டது.
கிராம மக்கள் அனைவரும் இந்தக் கல்யாணத்திற்காக மொய் எழுதினார்கள். ரூ 2 ஆயிரம் மொய்ப்பணம்வசூலானது. பின்னர் நடந்த திருமண விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல்வழங்கப்பட்டது. இரண்டு கழுதைகளுக்கும் தின்பதற்குக் காகிதங்கள் கொடுக்கப்பட்டன.
திருமணவிழா திருவிழா போல் மிக விமர்சையாக நடந்தது. இனிமேலாவது மழை வருமா என்று கிராம மக்கள்ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications