For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய்க்காலில் பாய்ந்த பஸ் .. உயிர் தப்பிய பயணிகள்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் கேரள மாநில போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்த 36 பேர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது. கோழிக்கோடிலிருந்து 36 பயணிகளுடன் கேரளபோக்குவரத்து கழக பேருந்து வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தது. குளிதகலைக்கு அருகே வரும் போதுதிடீரென அந்த பேருந்து கட்டுப்பாடிழந்து வாய்க்காலில் விழுந்தது.

பயணிகளின் அவலக் குரல் கேட்டு ரோந்து பணியிலிருந்த போலீசார் விரைந்து சென்று பார்த்த போது பேருந்துகால்வாய்க்குள் பாதியளவு மூழ்கி விட்டிருந்தது.

ஊர்மக்கள் உதவியுடன் அனைத்து பயணிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த பேருந்தின் ஓட்டுனர்குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X