ராமேஸ்வரம்: அமெரிக்கர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
ராமேஸ்வரம்:
தமிழகத்தில் ராமேஸ்வரம் அருகே தங்கியிருக்கும் 10 அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
ராமேஸ்வரம் அருகேயுள்ள மெய்யம்புலி என்ற கிராமத்தில் ஒரு கிறிஸ்தவசபை உள்ளது. இந்த சபை அமெரிக்காவில் இருந்து வந்துள்ள ஈவன்மைக்கேல் ஜோசப், அவரது மனைவி ஜெனிமேரி மற்றும் மகள்கள், மகன்கள், உறவினர்கள் அடங்கிய 10 பேர் நடத்தி வந்தனர்.
இவர்கள் 10 ஆண்டுகால சுற்றுலா விசா எடுத்து தங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் கிறிஸ்தவ சபையில் தங்கியிருந்து ஊனமுற்றோர், மனவளர்ச்சிகுன்றியவர்களை பாதுகாப்பது, ஏழைகளுக்கு உதவுவது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
மேலும் இவர்கள் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று கூட்டுப் பிரார்த்தனையும் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் வாங்கி வந்த சுற்றுலா விசாவை 6 மாதத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் இவர்கள் கடந்த 6 மாத காலமாகபுதுப்பிக்கவில்லை.
இதனால் அவர்கள் நவம்பர் மாதம் 19 ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications