இந்தியரைக் கொன்ற 4 பேருக்கு சவுதியில் தூக்கு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
சவூதி அரேபியாவில் இந்திய காவலாளியை கொன்ற 4 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் காவலாராக பணிபுரிந்து வந்தவர் இந்தியாவைச் சேர்ந்த முகமது அப்துல் என்பவர்.
அவர் ஒரு நாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது பிலர்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 4 பேர் அவர் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரை மிரட்டிநகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து அவரையும் கொலை செய்தனர்.
துபாய் போலீசார் இந்த வழக்கில் அந்த நான்கு பேரையும் கைது செய்தனர். சவூதி அரேபிய நாட்டு சட்டப்படி கொலை, கொள்ளை. கற்பழிப்பில்ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். அதன் படி இந்த நான்கு பேருக்கும் சனிக்கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications