கலப்பட பெட்ரோல் ஆலை .. 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்யும் ஆலை நடத்திய 7 பேர் சென்னையில்கைது செய்யப்பட்டனர்.

சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லியில் செட்டிபேடு என்ற இடத்தில் கலப்படபெட்ரோல் ஆலை நடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலைக் கொண்டு அந்தஇடத்தை சோதனையிடுமாறு போலீசுக்கு செங்கல்பட்டு ஐ.ஜி. ஜாபர் சேட் உத்தரவுபிறுப்பித்தார். மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீஸ் படை அதற்கான செயலில்இறங்கியது.

மணலி பெட்ரோல் ஆலையில் இருந்து வேலூர், காஞ்சிபுரம்,தர்மபுரி,திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு பெட்ரோல் ஏற்றிச் செல்லும் லாரிகள்இங்கு நிறுத்தப்பட்டு பெட்ரோல் டீசல் போன்றவை இறக்கப்பட்டு பர்னஸ் ஆயில்கலப்படம் செய்து அனுப்பப்பட்டு வந்தது

போலீஸ் நடத்திய சோதனையில் கலப்பட பெட்ரோல் ஆலை இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு, ஆலையில் இருந்த 25 காலி பீப்பாய்கள், 2 மோட்டார்சைக்கிள்கள், ரொக்கப்பணமாக ரூ 41 ஆயிரத்து 750-ம் கைப்பற்றப்பட்டது.

சனிக்கிழமை இரவு துவங்கிய சோதனை ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடந்தது.கலப்பட தொழிலில் ஈடுபட்டிருந்த மேகன் (25), வெங்கடேசன் (41), பாலகிருஷ்ணன்(32) உள்ளிட்ட 6 பேர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையிலிருந்துபெங்களூர், சித்தூர் போன்ற வெளிமாவட்டங்களுக்கு செல்லும் லாரிகளில் 500லிட்டர் வரை பெட்ரோல், டீசல் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+