குப்பை மேட்டில் கிடந்த முதியவர் மீட்பு
சேலம்:
குப்பை மேட்டில் உயிருடன் கிடந்த முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலத்தில், பொன்னம்மாள் லே அவுட் பகுதியில் வீராணம் ரோடு உள்ளது. இங்குஉள்ள ஒரு குப்பை மேட்டில் 70 வயது மதிக்கத் தக்க முதியவர் குப்பைகளுடன்கிடந்தார். இந்த முதியவர் நகராட்சி லாரியில் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கலாம்என அந்தப் பகுதி மக்கள் கருதினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி ஊழியர்கள் அங்கு வந்தனர். ஆனால்தங்களது லாரியிலிருந்து முதியவர் கொண்டு வந்து போடப்படவில்லை என உறுதிசெய்தனர்.
இந்த தகவலையறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் மாணிக்கம் விரைந்து வந்தார்.முதியவரைப் பார்வையிட்ட அவர், முதியவருக்கு உயிர் இருப்பதை அறிந்தார்.அவரை உடனே மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
முதியவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.