நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வக்கீல்கள் முடிவு
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் சனிக் கிழமையன்று நீதிமன்றத்தை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி ஆனந்தின் வயது சம்பந்தமாக இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலை வெளிப்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றவக்கீல்கள் சங்கம் சனிக் கிழமையன்று நீதிமன்றத்தை புறக்கணிப்பது என முடிவு செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த்தின் வயது குறித்து முன்னாள் மத்திய சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெத்மலானி பிரச்னைகள் கிளப்பினார்.
இந்த விஷயம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சுந்தரம் உச்ச நீதிமன்றத்திற்கு தந்தி அனுப்பியுள்ளார். இதை நீதிமன்ற அவமதிப்பாக கூறிஉச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் சுந்தரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த பிரச்சனையால், இந்திய அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலின் கடுமைத் தன்மையை தெரிவிக்கும் விதமாக சென்னை உயர் நீதிமன்றவக்கீல்கள் சங்கத்தினர் சனிக் கிழமை மட்டும் அடையாளமாக நீதிமன்றத்தை புறக்கணிப்பது என உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications