For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரதட்சணைக் கொடுமையில் தாய், மகள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வரதட்சணைக் கொடுமையால் மகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப் பாளையத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அமுதா (27). இருவருக்கும் நித்யா(5), பாலகிருஷ்ணன் (7) என்ற குழந்தைகள் இருந்தனர்.

இவரது வீட்டில் அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்தது. அமுதாவை காளீஸ்வரன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமுதா, தனது இரண்டுகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பூசாரிபட்டி அருகே உள்ள பாசனக் கால்வாய்க்குச் சென்றார். அங்கு இரு குழந்தைகளையும் கால்வாயில் தள்ளி விட்டுதானும் குதித்தார்.

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். இதில் சிறுவன் பால கிருஷ்ணனை மட்டும் உயிருடன்மீட்டனர். மற்ற இருவரும் இறந்து போயினர்.

இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X