அதிரடிப்படையில் சேர தயக்கம் காட்டும் போலீசார்
சென்னை:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையில்சேருவதற்கு தயாரா எனக் கேட்டு பல்வேறு இடங்களில் உள்ள சிறப்புக் காவல் படைபோலீசாருக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகுவீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக அரசின் அதிரடிப்படை தீவிரமாகஇறங்கியிருக்கிறது. புதிய வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் அதிகமான அளவு போலீசாரை ஈடுபடுத்துவது எனமுடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, திருச்சி, கோவை, பழநி மற்றும் மணிமுத்தாறுபோன்ற இடங்களில் உள்ள சிறப்பு காவல்படை பட்டாலியனிலிருந்து போலீசார்வரவழைக்கப்ட்டிருக்கிறார்கள்.
பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்படிருக்கிறார்கள். வீரப்பனுக்கு உணவு அனுப்புவது மற்றும் அவனுக்கு தகவல்ஏதும் செல்ல முடியாதபடி மலையடிவாரத்திலும், மலையைச் சுற்றியும் காவல்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
காட்டில் வீரப்பனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தும் பணியில் பெருமளவுபட்டாலியன் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வீரப்பனை தேடும் பணியில் சிறப்புஅதிரடி போலீசார் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சிறப்பு காவல் படையில் சிறப்பாக பணி புரிபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅதிரடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். அதிரடிப் படையில் போலீசாகர்எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.
இதில் சேர விருப்பம் இருப்பவர்கள் பெயர் கொடுக்குமாறு சிறப்பு போலீஸபட்டாலியன்களுக்கு அரசு சுற்றிக்கை அனுப்பியிருக்கிறது. ஒவ்வொருபட்டாலியனிலிருந்தும் 5 முதல் 10 போலீசார் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால்வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட போலீசார் பெரும்பாலானவர்கள்விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.