காந்தியை தவிர மற்ற தலைவர்கள் விழாக்களுக்குத் தடை
டெல்லி:
தேவையில்லாத செலவுகளைக் குறைக்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
மத்திய அரசின் திட்டமில்லா செலவைகுறைப்பதற்காகவும், நிதிப்பற்றாக்கறையைைகுறைக்கவும் மத்திய அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது.
காந்தியடிகளின் பிறந்த நாள், நினைவு நாள் தவிர மற்ற தலைவர்கள் பிறந்தநாள்,நினைவு நாள் விழாவிற்கான செலவுகளை மத்திய அரசு இனிமேல் ஏற்காது எனஅறிவித்துள்ளது.
புதிய வாகனங்கள் கிடையாது:
அதே போல பல்வேறு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.
தேவையற்ற புதிய பதவிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தினால் அதற்கு மத்திய அரசுஉதவி செய்யாது, மாநில அரசுகளே அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தைத் தவிர பிற அமைச்சகத்தவர்கள் வெளிநாடு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறு சிறு விஷயங்களுக்காக மாநாடு, அரசு விழாக்கள் போன்றவைநடத்தப்படக்கூடாது என பல அதிரடி உத்தரவுகள் வந்த வண்ணமிருக்கதிஙகள்கிழமையன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா தேசிய தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாள் விழாக்கள் அரசின்செலவில் நடத்தப்பட மாட்டாது என தடை விதித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
டெல்லி உள்ள தேசத்தலைவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் விழாக்கள் இனி அரசுசெலவில் கொண்டாடப்பட மாட்டாது. அவ்வாறு தலைவர்கள் சமாதியில்கொண்டாடப்படும் விழாக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யாது,
காந்தி ஜெயந்தி விழாவுக்கும், அவரது நினைவு நாள் விழாவுக்கும் ராஜ்காட்டில் காந்திசமாதி கமிட்டி பொறுப்பேற்றுக் கொள்ளும். அரசின் நிதிப்பற்றாக்குறையைகுறைக்கவும், தலைவர்களின் பாதுகாப்பு செலவை குறைக்கவும் இந்த நடவடிக்கைஎடுக்கபடுகிறது என அவர் கூறியுள்ளார்.
இதன் படி இனிஇதுவரை அரசு செலவில் நடந்து வந்த நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிறந்த நாள், நினைவு நாள் விழாக்கள் இனி அரசு செலவில்நடக்காது.
இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications