For Daily Alerts
Just In
வங்கக் கடலைக் கடக்கிறது புயல்
சென்னை:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய் கிழமை கரையைக் கடக்கிறது.
தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் ஞாயிற்று கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருந்தது. இ திங்கள் கிழமை பிற்பகலில் புயலாகி உருவெடுத்தது. இந்த புயல் செவ்வாய் கிழமை கரையைக் கடக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராயச்சி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புயல் தமிழகத்திற்கு தென் கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மேலும் வலுவடைந்து வடமேற்கு பகுதியில் நகரும்.
இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், பாண்டிச்சேரியிலும் செவ்வாய் கிழமை மழை பெய்யும் வ என தெரிவித்துள்ளது.
Story first published: Tuesday, November 28, 2000, 5:30 [IST]