தற்கொலை செய்த விளையாட்டு வீரருக்கு ஜெ. உதவி
சென்னை:
வேலை கிடைக்காததால் வாழக்கையில் கஷ்டப்பட்டு தற்கொலை செய்து கொண்ட விளையாட்டு வீரர் ஜெயவேல் குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையிலிருந்து ரூ 1 லட்சம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி மாணவரும், விளையாட்டு வீரருமான ஜெயக்குமார் வேலை கிடைக்காததனால் வாழ்வில் கஷ்டப்பட்டு வந்தார். மனவருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அவருக்கு ஜெயலலிதா உதவுவதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னனையில்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவிலும், மாலத்தீவிலும் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக விளையாடிய இளம் வீரர், பட்டதாரியாக இருந்தும் வேலைகிடைக்காமல் நொந்து தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தமிழக அரசுத் துறையில் வேலை வாய்ப்பு அளிக்காதகருணாநிதிதான் இந்த இளைஞர் ஜெயவேல் சாவிற்கு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டுத் துறையில் உள்ள திறமை அடிப்படையில் வேலை தேடி இந்தியா முழுதும்அலையும் அவலமான நிலை உள்ளது.
வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
பல்கலை கழக விளையாட்டு வீரராகவும், இளநிலை தேசிய விளையாட்டு வீரராகவும் விளங்கிய லயோலா கல்லூரி மாணவர் ஜெயவேல் தற்கொலைசெய்து கொண்டு இறந்தது இதற்கு சான்று.
மறைந்த விளையாட்டு வீரரின் குடும்பத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறக் கட்டளையிலிருந்து ரூ 1 லட்சம் வழங்கப்படும். மேலும் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்ற முதல் தமிழ் பெண்மணியான, தமிழ்நாட்டின் ஜெயலட்சுமிக்கும் ரூ 1 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications