இந்தியா-பாகிஸ்தான் ரயிலுக்கு காத்திருந்த பயணி குளிரில் நடுங்கி சாவு

Subscribe to Oneindia Tamil

அடாரி:

இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் ரயில் பாதுகாப்பு காரணங்குக்காக இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

இந்த ரயில் வரும் என்று இரவு முழுவதும் திறந்த வெளி ரயில் நிலையத்தில் காத்திருந்த முதியவர் கடும் குளிர் காரணமாக இறந்துபோனார். இந்த சம்பவம் இந்தியாவின் எல்லைப் பகுதி ரயில் நிலையமான அட்டாரியில் நடந்தது.

திங்கள்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்தது. முகமது சுமீர் (61) என்பவர் பாகிஸ்தானின் மிர்புரைச் சேர்ந்தவர். இவர்லாகூருக்குச் செல்லும் சாம்ஜவ்தா ரயிலுக்காக காத்திருந்தார். இவருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயிலுக்காககாத்திருந்தனர்.

ஆனால் இந்த ரயில் பாதுகாப்பு காரணங்களால் அடாரி ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்வில்லை. கடும் குளிரைத்தாங்கமுடியாமல் சுமீர் இறந்து போனார்.

அமிர்தசரசில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவர் குளிர் காரணமாகஇறந்தததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.

அமிர்தசரசில் இருக்கும் எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவிக்கையில், எல்லை பாதுகாப்பு படையினர்தான்ரயில்பாதையிைன் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியில் இருக்கிறார்கள்.. எலலை பாதுகாப்புப் படைக்கு மாலை 6 மணிக்குமேல் வரும் ரயில்களை தடுத்து நிறுத்தும் உரிமை உண்டு

லாகூரிலிருந்து வரும் சம்ஜவ்தா ரயில் நண்பகல் 12 மணிக்கு அடாரி ரயில் நிலயைம் வர வேண்டியது. அது 6 மணி நேரம்தாமதமாக மாலை 6 மணிக்கு வந்தது. அதனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த ரயிலை அனுமதிக்கவில்லை.

இரவு நேரத்தில் ரயில்வே கேட்டை திறப்பதற்கு உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் பாதுகாப்புகாரணங்களால் திங்கள் கிழமையன்று மறுக்கப்பட்டது என கூறினார்

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+