பாஸ்போர்ட்டின்றி இந்தியா வந்தால் 5 ஆண்டு ஜெயில்
டெல்லி:
பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைவோருக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.
அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. இதற்கு அனைவரும் ஒப்புதல் அளித்தபின் மசோதாநிறைவேறியது.
விவாதத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் சாமி கூறுகையில், தீவிரவாதிகள் நடமாட்டம், ஆள்கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் இந்தமசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது.
மற்ற கட்சியினர் பேசுகையில், பாஸ்போர்ட் ஆபிஸ்களை கம்ப்யூட்டர் மயமாக்குதல் ஊழியர்களை அதிகரித்தல், பாஸ்போர்ட் புதுப்பிப்பதை எளியாைக்குதல்,பாஸ்போர்ட் அலுவலகங்களில் லஞ்ச ஊழல்களைத் தடுப்பது போன்றவைகள் குறித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications