தேசிய கொடியை அவமதித்த 3 பேர் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தேசியக் கொடியை அவமதித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் கருங்கல் பாளையத்தில் நவம்பர் 27ம் தேதி அளித்துள்ள புகாரில்கூறியதாவது:

கடந்த சுதந்திர தினத்தன்று கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த பேரூராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினத்தன்றுபேரூராட்சித் தலைவர் மற்றும் செயலர் ஆகியோர் கொடியேற்றினர்.

பின்னர் அலுவலகத்தைப் பூட்டி விட்டுச் சென்று விட்டனர். ஆனால், மீண்டும் 6 மணிக்கு தேசிய விதிமுறைப்படி இறக்க வில்லை.

எனவே, இதையடுத்து மழை பெய்தது. இந்த மழையில் தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. மேலும், இரவு 7. 45 மணிக்குத் தான் தேசியக் கொடியைஊழியர்கள் இறக்கினர்.

இது தேசியக் கொடிக்குச் செய்த அவ மரியாதையாகும். எனவே தேசியக் கொடியை அவமதித்த பேரூராட்சித் தலைவர், செயலர் மற்றும் ஊழியர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+