நாளை வீடு திரும்புகிறார் மாறன்
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் உடல் நிலை தேறி, வியாழக் கிழமை வீடு திரும்புகிறார் என்று அப்பல்லோமருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னைஅப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிரமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
லண்டன் மற்றும் ஜெர்மன் நாட்டிலிருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சையளித்தனர். அதன் பின்பு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
உடல் நலம் தேறினார்:
தற்பொழுது அவர் எழுந்து நடக்கிறார். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவையும் சீராக இருக்கிறது. எனவேவியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு அவர் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்புகிறார். இதனை அப்பல்லோமருத்துவமனை நிர்வாகம் தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.