இண்டர்நெட் உதவியால் கற்பழிப்பு
கோலாலம்பூர்:
தன்னுடன் இன்டர்நெட்டில் சாட் செய்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரைகற்பழித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மலேசியாவில் பெட்டாலிங் ஜெயா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குவசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி இண்டர்நெட்டில் ஒரு ஆணுடன் சாட் செய்தார்.
அந்த நபர் பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அதில் பேசிமுகவரியை கேட்டுக் கொண்டார். அடுத்த 2 மணி நேரத்தில் அவளது வீட்டுக்குள்நுழைந்து பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்குவிட்டு கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பெட்டாலிங் மாவட்ட உயர் துணை கமிஷனர் டெல் அக்பர்கூறியதாவது:
குற்றம் புரிந்த பாதிக்கப்பட்ட பெண் காலை 8 மணி அளவில் இன்டர்நெட் மூலம் சாட்செய்திருக்கிறார். அந்த பெண் தனது தொலைபேசி எண்ணையும் அவருக்குகொடுத்திருக்கிறார். குற்றவாளி இந்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் அவரை சந்திக்க வேண்டும் என கூறியிருகிறார்.
அவர் அதன் பின் 10 மணி அளவில் இந்த பெண்ணின் வீட்டிற்கு வந்திருக்கிறார், அந்தமனிதர் தான் ஒரு டாக்டர் என கூறியதும் இந்த பெண் தனக்கு உடல் நிலை சரியில்லைஎன கூறியிருக்கிறார்.
வெளியே சென்று ஒரு மணி நேரம் கழித்து சில மருந்துகளை வாங்கி வந்து இந்தபெண்ணிற்கு கொடுத்துள்ளார். மருந்துகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே இந்தபெண் மயங்கி விழுந்திருக்கிறார்.
இந்த பெண் பிற்பகல் 2 மணிக்கு கண் விழித்து பார்த்த போது தான் ஆடை ஏதுமின்றிபடுக்கையில் இருப்பதைக் கண்டார். பின் போலீசாரிடம் இரவு 8 மணிக்கு புகார்செய்தார். குற்றவாளிக்கு 28 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.என்றார்.
யு.என்.ஐ.