உதயமானது பாஸ்வானின் ஜனசக்தி
டெல்லி:
ராம்விலாஸ் பஸ்வான் ஜனசக்தி என்ற பெயரில் புதிய கட்சியை செவ்வாய் கிழமை துவங்கினார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவுக்கும், ராம் விலாஸ் பஸ்வானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனால் தனது ஆதரவு எம்.பி.க்கள் 3 பேருடன் தான் தனிக் கட்சி தொடங்க இருப்பதாகவும், தனது கட்சியை தனி அணியாக அறிவிக்க வேண்டும்எனவும் லோக்சபா சபாநாயகர் பாலயோகியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பாஸ்வான்.
அவர் அறிவித்தபடி செவ்வாய் கிழமை ஜன சக்தி என்ற புது கட்சியை தொடங்கினார். தொடக்க விழா டெல்லியில் செவ்வாய் கிழமை கட்சி பேரணியுடன்நடந்தது.
பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் புதிய கட்சி சாதி மதங்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடும், சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும்பூர்த்தி செய்ய பாடுபடும் என்றார்,
தொண்டர்களிடையே பேசிய பஸ்வான் சரத் யாதவை கடுமையாக தாக்கி பேசினார்.