அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள்தண்டனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
சொத்துத் தகராறில் தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை காட்டூர் குன்னக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருக்கும் இவரது தம்பி கிருஷ்ண மூர்த்திக்கும் பொதுவான ஒரு கடை உள்ளது.இந்தக் கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த வாடகையை இருவரும் வசூலித்து வந்துள்ளனர். கடந்த 99ம் ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் வாடகை வசூல் செய்வதற்குச் சென்றனர். அப்போதுஇருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் தம்பியை கத்தியால் பாலசுப்ரமணி குத்தினார். இதனைத் தடுக்க வந்த ரவிக்குமார் என்பவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவைமுதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி தணிகாசலம், தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications