அல் உம்மா தீவிரவாதிகள் உண்ணாவிரதம்
சேலம்:
சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தீவிரவாதிகள் தங்களை கோவை சிறைக்கு மாற்றக் கோரி திடீர் உண்ணாவிரதம்இருந்தனர்.
கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தீவிரவாதிகள் சாகுல் அமீது, அபுதாகீர், சுதிர்பாபு, பாட்ஷா, அக்பர் அலிஉள்பட 8 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.
இதற்கிடையே புதன்கிழமை இரவு இவர்கள், கோவை மத்திய சிறைக்குத் தங்களை மாற்ற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டம்நடத்தத் தொடங்கினர்.
விவரம் தெரிந்து கொண்டதும், சேலம் மத்திய சிறை சூப்ரிடென்டன்ட் பாலன் சிறைக்குச் சென்று அவர்களிடம் உண்ணா விரதத்தை முடிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
வெடிகுண்டு சோதனை:
இந்த நிலையில் கோவை டிஐஜி எஸ்ரா சற்குணம் மத்திய சிறைக்கு சென்று அல் உம்மா தீவிரவாதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வெடிகுண்டுகள்இருக்கிறதா என்று சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications